சனி, 28 ஏப்ரல், 2012

ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை பதிவுசெய்வொம்!.

இந்தியா முழுவதும் ஜாதிவாரியாக மக்கள்தொகை எண்ணிக்கையை வைத்துத்தான் இடஒதுக்கீடு உட்பட அனைத்து சலுகைகளையும் அரசு சமூகங்களுக்கு வழங்கி வருகின்றது. 2001-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் முஸ்லீம்கள் 13.4 சதவிகிதமும், தமிழகத்தில் முஸ்லீம்கள்
 5.6சதவிகிதமும் வாழ்ந்து வருவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. ஆனால் அப்போதே பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்களின் எண்ணிக்கையை இக்கணக்கெடுப்பில் சேர்க்காமல் விட்டுவிட்டனர்.

எனவே தற்போது நடைபெறும் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நமக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். இதில் அனைத்து முஸ்லீம்களின் பெயரும் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வெண்டும்.

இது நமது எதிர்காலம் சம்பந்தப்ப்ட்ட விஷயமாகும். எனவே ஒவ்வொரு முஸ்லீமின் பெயரும் சேர்க்கப்பட வேண்டும்.

இந்த தகவலை தங்களுடைய பள்ளி ஜும்-ஆவில்  அறிவிப்பு செய்து நம் சமூக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என  ஜமாத்தின் அனைத்து நிர்வாகிகளையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு:

கணக்கெடுப்பு வரும் நபர்களிடம் முஸ்லீம் என்று மட்டும் கூறுவது நல்லது. எந்த ஜாதியையும் சொல்ல வேண்டாம் என ஜமாத்தாருக்கு தெரியப்படுத்தவும், ஏனெனில் முஸ்லீம்களின் வழக்கத்தில் இல்லாத பிரிவுகளை கூறி இடஒதுக்கீடு உட்பட அனைத்து சலுகைகளும் தேசிய அளவில் மறுக்கப்பட்டு வருகின்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.